NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதுளை பஸ் விபத்தில் ஒருவர் பலி – நால்வர் காயம்!

பதுளை – மஹியங்கனை வீதியில் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இன்று (10) இ.போ.ச பஸ்ஸொன்று ஓட்டோ ஒன்றுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹியத்தகண்டியவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இ.போ.ச பஸ் பதுளையிலிருந்து ரிதிபான நோக்கிப் பயணித்த ஓட்டோவுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் ஓட்டோவில் பயணித்த 79 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் உட்பட மேலும் மூவர் காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share:

Related Articles