NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ் முச்சக்கரவண்டி மோதி விபத்து – இருவர் படுகாயம்

தங்காலை ஹம்பாந்தோட்டை பிரதான வீதியின் உனகுருவ சந்தியில் பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்தால் ஆத்திரமடைந்த மக்கள் பஸ்சின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். அம்பாறையிலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும், பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share:

Related Articles