NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானில் பாரிய குண்டு வெடிப்பு – 22 பேர் பலி…!

பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குண்டுவெடிப்பு சம்பவம் இன்று (07) பலுசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் குண்டு வெடிப்பில் பலர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிஷின் மாவட்டத்தில் சுயேச்சை தேர்தல் வேட்பாளரின் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், பாகிஸ்தானில் நாளை (08) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.  தேர்தல் திகதி அறிவித்த நாளில் இருந்து குண்டு வெடிப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதுடன் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles