NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தான் – இஸ்லாமாபாத் நகரில் மதில் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பாகிஸ்தான் – இஸ்லாமாபாத் நகரில் மதிலொன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதான வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்லாமாபாத்தின் பெஷாவர் வீதியில் இன்று (19) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இஸ்லாமாபாத், ராவல்பிண்டி பிரதேசங்களில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மதிலொன்று இடிந்த நிலையில், இடிபாடுகளிலிருந்து 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles