NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை வேன் மோதி 4 வயது சிறுவன் பலி…!

அம்பாறை கல்முனை பிரதேசத்தில் பாடசாலை வேன் மோதி நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று (29) நீலாவணை ( கல்முனை) யில் இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் நான்கு வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.

வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த குறித்த சிறுவன் , கேற் திறந்திருந்ததும் தற்செயலாக வீதிக்கு ஓடி வந்துள்ளார் . அபோது பாதையால் சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த வேன் சிறுவனை மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்,இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share:

Related Articles