NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்ற நிர்வாக அதிகாரிகளுக்கான எரிபொருள் குறைப்பு – சுற்றறிக்கை வெளியீடு.!!

பாராளுமன்றச் செயலாளர் நாயகம்  உள்ளிட்ட பாராளுமன்ற நிர்வாக அதிகாரிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டைக் குறைத்து விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை செயலாளர் நாயகத்திற்கு வரம்பற்ற எரிபொருள் வழங்கப்பட்ட நிலையில் இனிவரும் காலங்களில் மாதத்திற்கு 220 லிற்றர் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதிச் செயலாளர் பெறும் எரிபொருளின் அளவும் மாதத்திற்கு 165 லீற்றராகக் குறைக்கப்பட்டுள்ளது.

உதவிச் செயலாளர் நாயகம் மற்றும் துறைத் தலைவர்கள் பெறும் எரிபொருளின் அளவை மாதத்திற்கு 135 லிற்றராகவும், செயலாளர் நாயகத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் பெறும் எரிபொருளின் அளவை மாதத்திற்கு 115 லிற்றராகவும் குறைக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையின்படி, எரிபொருள் கட்டுப்பாடுகள் 02 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன்.

பாராளுமன்றத் தலைவர்கள் கடந்த காலங்களில் அதிகமாக எரிபொருளைப் பயன்படுத்துவதாக வெளியான தகவல்களையடுத்து, அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர எரிபொருள் கொடுப்பனவைக் குறைக்க நாடாளுமன்ற பணியாளர் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் அண்மையில் தீர்மானிக்கப்பட்டு

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles