NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது – முன்னாள் எரிசக்தி அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு!

உர மானியம் அதிகரிப்பு உட்பட பல அரசாங்க முயற்சிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

புத்துயிர் பெற்ற கொள்கைகளில், உர மானியத்தை 15ஆயிரம் ரூபாயில் இருந்து 25ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பது மற்றும் மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தை அறிமுகப்படுத்துவது ஆகியவை உள்ளடங்குகின்றன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கீழ் இந்த திட்டங்கள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles