NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தளம் – ஆனமடுவ பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட கொம்பன்…!

புத்தளம் – ஆனமடுவ, செம்புவெவ பகுதியில் கொம்பன் யானையொன்று உயிரிழந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த யானை நேற்றைய தினம் (02.09) மீட்கப்பட்டுள்ளது.யானை சடலமாக இருந்ததை அவதானித்த பிரதேச மக்கள், புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போது கொம்பன் யானையின் தும்பிக்கை மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு, உயிரிழந்த கொம்பன் யானை  40 வயதுடையது எனவும் 9 அடி உயரம் மற்றும் அதன் தந்தம் 2 அரை அடி நீளம் எனவும் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த உயிரிழந்த யானைக்கு உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை  வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

Share:

Related Articles