பெரகலை, வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கிலே மீற்றர்) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதனால், அந்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாற்று வீதியாக எல்ல-வெல்லவாய வீதியைப் பயன்படுத்தலாம் என பதுளை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை இந்தச் சம்பவம் பதிவாகியதாகவும் தடைப்பட்டுள்ள வீதியில் உள்ள மண்ணை அகற்றுவதற்கு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.