பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், அந்தப் பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ளார்.
இன்று பிற்பகல் அவர் பதவி விலகியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக வெளிநாட்டு எரிபொருள் நிறுவனம் ஒன்றின் ஆலோசகராக பணிபுரியும் ஒருவரை நியமிக்க எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தயாராகி வருவதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.





