NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொது சுகாதாரப் பரிசோதகர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது..!

எல்பிட்டி – பத்திராஜ மாவத்தை பகுதியில் பொது சுகாதாரப் பரிசோதகர் ரொஷான் குமார சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles