NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதவாச்சி நகரில் 16 வயது சிறுமியை கடத்த முற்பட்டதாக முறைப்பாடு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அநுராபுரம் – மதவாச்சி நகருக்கு அருகில் 16 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துச் செல்ல முயல்வதாக மதவாச்சி பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், சம்பவம் தொடர்பான இடத்திலுள்ள CCTV காட்சிகள் தொடர்பான விசாரணையில் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெற்றதாகத் தகவல்கள் இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், வீதியின் ஏனைய CCTV காட்சிகளை மதவாச்சி பொலிஸார் பரிசோதித்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles