NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மருமகன் தாக்கியதில் மாமியார் உயிரிழப்பு – மனைவி கவலைக்கிடம்

மொனராகலை நக்கல பலம ஹந்திய பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மருமகன் தாக்கியதில் மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மனைவி காயமடைந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நக்கல பகுதியைச் சேர்ந்த சேர்ந்த புஷ்பா குமாரி (44) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த குறித்த நபரின் மனைவி மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மருமகன் பொலிஸ் நிலையத்தில்  சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share:

Related Articles