NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாத்திரை தொண்டைக்குள் சிக்கியதில் பாடசாலை மாணவி பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மருதானை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று (10) காலை இரண்டு மாத்திரைகளை விழுங்கிய நிலையில், தொண்டையில் மாத்திரை சிக்கிக்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பலப்பிட்டிய பிரதேச பாடசாலையில் கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக குறித்த சிறுமி வீட்டில் இருந்து இரண்டு மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாகவும், அது தொண்டைக்குள் சிக்கிக்கொண்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று (10) பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணை நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles