NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மான் இறைச்சியுடன் மூவர் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அம்பாறை – பாணமை பிரதேசத்தில் ஒரு கிலோவுக்கும் அதிகமான மான் இறைச்சியுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை அதிகாரிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே மான் இறைச்சி கடத்தலில் ஈடுபட்டு வந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மான் இறைச்சி மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பாணமை வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles