NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மியான்மாரில் இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு!

மியான்மாரில் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் மியான்மார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களுக்கு 07 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மீனவர்கள் விரைவில் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share:

Related Articles