NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முடிவுக்கு வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடர்!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24ஆம் திகதியுடன் நிறைவடையும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் விரைவில் வெளியிடப்படும் எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றக் கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் ஆலோசனைகள் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி பின்புலத்திலேயே சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share:

Related Articles