NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முடிவுக்கு வரும் மிலிந்த மொரகொடவின் பதவி காலம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது பதவியில் இருந்து விலகுவதற்கான தூதுவரின் தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிலிந்த் மொரகொட 29 ஆகஸ்ட் 2021 அன்று இந்தியாவிற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

மொரகொட அமைச்சரவை அதிகாரங்களைக் கொண்ட உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டதுடன், இலங்கையில் அமைச்சரவை அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்ட முதலாவது உயர்ஸ்தானிகர் இவரே என்பதும் விசேட அம்சமாகும்.

Share:

Related Articles