NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முதன்முறையாக வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது பி லவ் கண்டி!




லங்கா பிரீமியர் லீக் T-20 தொடரின் இறுதிப் போட்டியில், தம்புள்ளை அவுரா அணியை வீழ்த்தி பி-லவ் கண்டி அணி முதல்முறையாக சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டுள்ளது.

கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள தம்புள்ளை அவுரா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அவுரா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் சதுரங்க டி சில்வா 2 விக்கெட்டுகளையும் நுவான் பிரதீப் மற்றும் மொஹமட் ஹஸ்னெய்ன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பி-லவ் கண்டி அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பி-லவ் கண்டி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் மொஹமட் ஹரிஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் நூர் அஹமட் 3 விக்கெட்டுகளையும் பினுர பெனார்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Share:

Related Articles