NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மெக்சிக்கோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 18 பேர் பலி மேலும் 32 பேர் காயம்

மெக்சிக்கோ நகரின் புறநகர்ப் பகுதியில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள சான் லூயிஸ் டி லா பாஸிலிருந்து மெக்சிகோ நகருக்கு தெற்கே உள்ள சால்மா சரணாலயத்திற்கு பயணித்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் 32 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles