NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மொனராகலையில் 3 பிள்ளைகளின் தாய் கொலை – கணவன் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மொனராகலை – வெள்ளச்சிக்கடை பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (18) காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் அதே பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் எனத் தெரிவித்த பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் கணவனை கைது செய்துள்ளனர்.

Share:

Related Articles