NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மொனராகலை பகுதியில் கோரச் சம்பவம் -கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு…!

மொனராகலையில் பழக்கடை ஒன்றிற்கு அருகில் சடலமொன்றை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை, படல்கும்புர வீதியில் 11 ஆவது மைல்கல் அருகில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பழக்கடைக்கு அருகிலேயே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும் படல்கும்புர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படல்கும்புர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று பிற்பகல் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புஸ்ஸல்லாவ, படல்கும்புர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இவர் அப்பழக்கடையின் உரிமையாளர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதிக்கும் நேற்றைய தினத்திற்கும் இடையில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும்,இக்கொலை தொடர்பில், சந்தேகநபரோ அல்லது கொலைக்கான காரணமோ இதுவரை அறியப்படவில்லை எனவும், இது தொடர்பான விசாரணைகளை படல்கும்புர பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Share:

Related Articles