NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் நெடுந்தூர பஸ் சேவைகள் முற்றாக நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பஸ் சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நொடுந்தூர பஸ் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

முறையான பஸ் தரிப்பிடம் இல்லாததால் இன்றுமுதல் (28) தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்று ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில். யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள், அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் தமது சேவையை முற்றாக இடைநிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், உள்ளூர் தனியார் பஸ் சேவைகள் வழமைபோன்று தமது சேவையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles