NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுவதிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட ‘மாமா’ கைது!

கொழும்பு – கல்கிஸ்ஸ பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உடன் வைத்திருந்த ‘மாமா’ என்ற பெயருடைய கடத்தல்காரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் தங்கியுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்த பொலிஸார், நான்கு யுவதிகளையும் மேலும் நான்கு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

ஐஸ் போதைப்பொருட்கள் மற்றும் சில உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அத்துடன், யுவதிகளுக்கு போதைப்பொருள் கொடுத்து அவர்களை பணத்திற்கு விற்பனை செய்யும் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளமையும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், பொலிஸார் வீட்டை சோதனையிட்டதில், போதைப்பொருள் ஐஸ் பொதி செய்ய பயன்படுத்தப்பட்ட சிறிய மெழுகு குச்சிகளையும் பெருமளவில் கண்டுபிடித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles