NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரம்புக்கனையில் உள்ள நீச்சல் தடாகத்தில் விழுந்து ஊழியர் ஒருவர் உயிரிழப்பு !

ரம்புக்கனை, கொடிகமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்து ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் பன்வில பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

ரம்புக்கனை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles