NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரஷ்ய பிரஜையை தாக்கி பணம் கொள்ளையடிப்பு!

ஹபராதுவ – தல்பே பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றுக்குள் வைத்து, ரஷ்ய பிரஜையொருவரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் ரஷ்யாவைச் சேர்ந்த மேலும் நால்வரை கைதுசெய்வதற்கு ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இந்தச் சம்பவத்தில், 39 வயதுடைய ரஷ்ய பிரஜை காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ரஷ்ய பிரஜைகள் நால்வரும் தேடப்பட்டுவருவதுடன், ரஷ்ய ரூபெலை இலங்கை ரூபாவுக்கு மாற்றிக்கொண்டிருந்த ரஷ்ய பிரஜையே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அந்தப் பணப் பறிமாற்றத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் முரண்பாடு வலுப்பெற்றதை தொடர்ந்தே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். 

இதேவேளை, தன்னை தாக்கிய ரஷ்ய பிரஜைகள் தன்னிடமிருந்த 38 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட நபர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles