NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வடக்கு – கிழக்கில் லியோ திரைப்படத்தை நிறுத்தக்கோரி கடிதம்?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வடக்கு – கிழக்கு பகுதிகளில் எதிர்வரும் 20ஆம் திகதி நிர்வாக முடக்கல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்று தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தை நிறுத்தக் கோரி தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக போலியான கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

எனினும், அந்த கடிதம் போலியானது எனவும், இது பழைய கடிதங்களில் இருந்து கையொப்பங்களை எடுத்து போலியாக தயாரிக்கப்பட்ட கடிதம் என்றும் தமிழ் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles