NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வரட்சியான காலநிலை காரணமாக 13,000 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 9 பிரதேச செயலகப் பிரிவுகளில் 3956 குடும்பங்களைச் சேர்ந்த 13,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

திவுலபிட்டிய பிரதேச செயலர் பிரிவில் 2351 குடும்பங்களைச் சேர்ந்த 7053 பேரும், மஹர பிரதேச செயலர் பிரிவில் 917 குடும்பங்களைச் சேர்ந்த 3655 பேரும், அத்தனகல்ல பிரதேச செயலர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேரும், அத்தனகல்ல பிரதேச செயலர் பிரிவில் 3132 குடும்பங்களைச் சேர்ந்த 3132 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரக்காபொல பிரதேச செயலகப் பிரிவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேரும், ருவன்வெல்ல பிரதேச செயலர் பிரிவில் 110 குடும்பங்களைச் சேர்ந்த 550 பேரும், ஐயந்தோட்டை பிரதேச செயலர் பிரிவில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 289 பேரும், தெஹியோவிட்ட பிரதேசத்தில் 160 குடும்பங்களைச் சேர்ந்த 672 பேரும். கலிகமுவ பிரதேச செயலகப் பிரிவில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles