NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வீடமைப்பு உதவித் தொகை அதிகரிப்பு..!

குறைந்த வருமானம் பெறுவோருக்கு மேல் மாகாண வீடமைப்பு அபிவிருத்தி நிதியத்தின் கீழ் வழங்கப்படும் வீடமைப்பு உதவித் தொகையை மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க அதிகரித்துள்ளார்.

அதன்படி, புதிய வீடு கட்டுவதற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் மூன்று லட்சம் ரூபாயாகவும், ஏற்கனவே உள்ள வீட்டை மேம்படுத்தவோ அல்லது மீதமுள்ள பணிகளை முடிக்கவோ இதுவரை வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபாயும் இரண்டு லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் இம்மாதம் முதலாம் திகதி முதல் செல்லுபடியாகும் என ஆளுநர் வர்த்தமானி அறிவித்தலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Share:

Related Articles