NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானது உயர்தரப் பரீட்சைக்கான திகதி…!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இன்று (22) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி, க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் 2024 ஜனவரி 04 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2024 உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு (FR) இன்று (22.11.2023) உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான மற்றொரு மனு மனுதாரர்களால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

எனவே, 2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Share:

Related Articles