NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!

களு கங்கையின் குடா கங்கையின் மேல் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பாலிந்த நுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளில் குடா கங்கையின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக குடா கங்கையைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் ஊடாக உள்ள பக்க வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles