NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வேட்டைக்காக கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மட்டக்களப்பில் – வாகரை வனப்பகுதியில் வேட்டைக்காக கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவன் தனது உறவினர்களுடன் வேட்டையாட சென்ற போது அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி வெடித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனுடன் வேட்டையாட சென்ற 24, 28 மற்றும் 32 வயதுடைய மூன்று இளைஞர்கள் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles