NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹபராதுவ பகுதியில் துப்பாக்கி சூடு – இளைஞர் காயம்…!

ஹபராதுவ தல்பே வடக்கு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் எனக் கூறி காரில் வந்த சிலர், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, காலில் துப்பாக்கியால் சுட்டு, வழியிலேயே விட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து காயமடைந்தவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Share:

Related Articles