NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘ஹீனத்யான மஹேஷின்’ உதவியாளர் கைது!

பாதாள உலகக் குழுத் தலைவர் ‘ஹீனத்யான மஹேஷின்’ உதவியாளர் ஒருவர் கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த நபர், ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கொலை குற்றச்செயலில் ஈடுபட தயாராக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 9 மில்லிமீட்டர் ரக 05 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles