NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒரு ரன் வித்தியாசத்தில் மீண்டும் மண்ணைக் கவ்வியது RCB

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 223 ரன்கள் என்ற இலக்கை துரத்திய RCB அணி ஒரு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தற்போது தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஆர்சிபி அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று ஆறு தோல்வியை தழுவியது.

கடைசி ஓவரில் முதல் பந்து மற்றும் மூன்றாவது மற்றும் நான்காவது பந்து என சிக்சர் அடிக்க ஆர் சி பி அணி வெற்றியின் அருகே சென்றது. இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் தேவை என்ற போது கரன்சர்மா ஐந்தாவது பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதன் அடுத்து கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவை என இருந்தபோது ஆர் சி பி வீரர் ஃபெகர்சன் இரண்டாவது ரன்னை ஓட முற்பட்ட போது ரன் அவுட் ஆனார்.

இதன்மூலம் ஆர் சி பி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. இனி ஆர்சிபி அணி எஞ்சிய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணியின் தயவு இருந்தால் மட்டுமே பிளே ஆப்க்கு செல்ல முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

Share:

Related Articles