NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான 168 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடந்த செப்டெம்பர் மாதத்தில் மட்டும் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான 168 பாலியல் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (24) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 168 வழக்குகளில், அதில் 22 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டில் இலங்கையில் மாத்திரம் பதிவாகியுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை 11,000 ஆகும்.

2022இல் பதிவாகியுள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் 41 சதவீதம் பாலியல் துஷ்பிரயோகம் ஆகும்.

இதன்படி, கடந்த செப்டெம்பர் மாதம் பதிவாகிய சம்பவங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles