NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

19 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (09) இந்தியாவுக்கு மீள அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வாரகாலத்திற்குள் இவ்வாறு பெருந்தொகையான மீனவர்கள் இந்தியாவுக்கு மீள அனுப்பிவைக்கப்படும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த நிலையில், குறித்த மீனவர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இழுவை படகுகள் மற்றும் 178 இந்திய மீனவர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட மீனவர்கள் சட்ட நடவடிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, 2023 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 240 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 35 இழுவை படகுகள் கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Share:

Related Articles