வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் இருந்து பயன்படுத்தப்பட்ட 196 வாகனங்கள் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
முதல் தொகுதி நேற்று முன்தினம் தாய்லாந்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், இரண்டாம் தொகுதி இன்று வந்தடைந்துள்ளது.
இதேவேளை, மார்ச் மாத இறுதிக்குள் 4,000 வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டங்கள் உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.