NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

200 போதைமாத்திரைகளுடன் இருவர் கைது!

கோப்பாயில் சட்டவிரோதமான முறையில் ஒருவகை போதைமாத்திரைகளை விற்பனை செய்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யாழ். விசேட அதிரடிப்படை  அதிகாரிகள் குழுவொன்று நேற்று (09) மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விற்பனை செய்வதற்காக 200 போதைமாத்திரைகளை தம் வசம் வைத்திருந்த நிலையில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவர் மற்றும் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய மற்றுமொருவரும் இவ்வாறு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles