NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

23,005 ஆசிரியர் வெற்றிடங்கள்.

ஆசிரியர் வெற்றிடங்களுக்காக 23,005 பேர் பணியமர்த்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்புக்காக 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.இதன் பணிகள் அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.மேலும், கல்வியியற் கல்லூரி பயிற்சி முடித்த 4,160 பேர் கல்லூரிகளை விட்டு வெளியேறவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Share:

Related Articles