இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மருதானை மற்றும் சிலாபம் பிரதேசங்களில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மருதானை – சங்கராஜ மாவத்தையில் உள்ள பாலத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவர் நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் பொலிஸாரால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும் எனவும், அவர் 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை நேற்று மாலை சிலாபம் அம்பகந்தவில இரணவில கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை (27) தொடுவாவ பகுதியில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் பயணித்த படகு கவிழ்ந்ததில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 67 வயதுடைய மஹவௌ பிரதேசத்தில் வசிக்கும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.