NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

29ஆவது முறையாகவும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாற்று சாதனை!

நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாகவும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாற்று படைத்துள்ளார்.

நேபாளத்தில் சாகர்மாதா என்று அழைக்கப்படும் எவரெஸ்ட், கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் உயரத்தில் உள்ளது, இது பூமியின் மிக உயரமான மலை சிகரமாகும்.

இந்நிலையில் ‘எவரெஸ்ட் மேன்’ என்று அழைக்கப்படும் 54 வயதான நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

எவரெஸ்ட் மலையடிவாரத்தில் ஷெர்பா சமூகத்தை சேர்ந்தவர் கமி ரீட்டா முதன்முறையாக 1994இல் எவரெஸ்ட் சிகரத்தை தனது 24 வயதில் ஏறி சானை புரிந்துள்ளார்.

கின்னஸ் புத்தகத்தின் படி, ‘எவரெஸ்ட் மேன்’ என்றும் அழைக்கப்படும் கமி ரீட்டா ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில், கொவிட் தொற்றுநோய் காரணமாக நேபாளத்தில் எவரெஸ்டின் தெற்குப் பகுதி ஏறுபவர்களுக்கு மூடப்பட்டு, 2021 இல் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்டது, மே 2021 இல் காமி ரீட்டா தனது 25ஆவது ஆண்டாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து மீண்டும் சாதனை படைத்தார்.

2023 இல், கமி ரீட்டா எவரெஸ்ட் சிகரத்தை 27ஆவது முறையாக ஏறி, சக வழிகாட்டியான பசாங் தாவா ஷெர்பாவுடன் சாதனையை சமன் செய்ததோடு, தொடர்ந்து அந்த ஆண்டு மே மாதமே காமி ரீட்டா தனது 28ஆவது எவரெஸ்ட் ஏறுதலை முடித்ததன் மூலம் குறித்த சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில், காத்மாண்டுவில் இருந்து ஸ்பிரிங் சீசன் எவரெஸ்ட் பயணத்தை 28 பேர் கொண்ட குழுவுடன் மேற்கொண்ட அவர், உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டின் 71 ஆண்டுகால மலையேறுதல் வரலாற்றில் அதிக அளவில் 29ஆவது முறையாகவும் மே 12ஆம் திகதி காலை ஏறி வராலாற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles