NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

3 வயது பிள்ளையை தரையில் அடித்த தந்தை கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அவிசாவளை பிரதேசத்தில் தனது மூன்று வயது பிள்ளையை தரையில் அடித்ததாக கூறப்படும் தந்தையொருவர் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளை, தல்துவ தோட்டத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், பிள்ளையை தரையில் அடித்து, தனது மனைவிக்கு முன்னால் சென்று விஷம் அருந்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபர் அடிப்படை சிகிச்சைகளை பெற்றுக்கொண்டு வைத்தியசாலையிலிருந்து தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காயமடைந்த பிள்ளையின் தலை பிளந்து காதுகளில் இருந்து இரத்தம் வெளியேறியதால், உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அவிசாவளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles