NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தம்புள்ளை ஓரா அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பு ஆர்-பிரேமதாஸ மைதானத்தில் தற்போது நடைபெற்ற போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி டைடன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லசித் கிருஸ்புள்ளே 80 ஓட்டங்களையும் சகிப் அல் ஹசன் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ளை அணியின் பந்துவீச்சில், ஹெய்டன் கெர் 3 விக்கெட்டுகளையும் நூர் அஹமட் 2 விக்கெட்டுகளையும் பினுர பெனார்டோ, தனஞ்சய டி சில்வா மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, பதிலுக்கு களமிறங்கிய தம்புள்ளை அவுரா அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால், தம்புள்ளை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தம்புள்ளை அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அதேவேளை தோல்வியடைந்த காலி டைடன்ஸ் அணி, நாளை மறுதினம் நடைபெறும் இரண்டாவது வெளியேற்றுப் போட்டியில் விளையாடும்.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் ஜனித் பெரேரா 53 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

காலி டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், சகிப் அல் ஹசன், டப்ரைஸ் சம்ஸி மற்றும் தசுன் சானக மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

Share:

Related Articles