NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பதுளை, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று பிற்பகல் குறித்த மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று மாலை 5 மணிவரை நீடிக்ப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

Share:

Related Articles