NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

86 கிலோ போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது

குஜராத் கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பயங்கரவாத தடுப்பு படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சுமார் 86 கிலோ போதைப் பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைதுசெய்தனர். இதன் மதிப்பு 600 கோடி இலங்கை ரூபாவென தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு மாத்திரம் குஜராத்தில் கடலோர பொலிஸாரால் இதுவரை 3,400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles