NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Channel 4 காணொளி குறித்து விசாரணை நடத்தப்படும் : பாராளுமன்றத்தில் அரசாங்கம் அறிவிப்பு

சனல்-4 காணொளி தொடர்பில் விசாரணையை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரித்தானியாவின் சனல்-4 ஊடகம் தகவல்களை வெளியிட்டவுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் இலங்கை அரசியல்வாதிகளை மேற்கோள் காட்டியும் சனல்-4 சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பிலான காணொளி வெளியிடப்பட்டமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான பின்னணியில் குறித்த காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த சனல் 4 ஊடகத்தின் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பாராளுமன்ற தெரிவிக்குழு ஒன்றை நிறுவுவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேவை ஏற்பட்டால் சர்வதேச ரீதியிலான விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Related Articles