NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Channel 4’ குற்றச்சாட்டுகளை விசாரிக்க புதிய குழு நியமனம்

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ‘Channel 4’வின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் தலைமையில், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஏ.சி.எம். ஜயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோசா ஆகியோர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles