NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு !

வடக்கு ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் உள்ள நபாவி மசூதி அருகே தலிபான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்தநிலையில், அங்கு திடீரென குண்டு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதோடு குறித்த இடத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி தற்கொலை படை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டதோடு குறித்த கொலைக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதில் அகமது உள்பட அவரது வாகன ஓட்டுனரும் கொல்லப்பட்டதோடு, மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
இவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையிலேயே குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles