NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காஸாவின் மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல் – 33 பேர் உயிரிழப்பு!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது போருக்கான முடிவுக்கு வழிவகுக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றுமாலை வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் முகாமில் தஞ்சமடைந்திருந்த 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், 21 பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், குறித்த தாக்குதலில் 85 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 50 வரை உயரும் எனவும் அஞ்சப்படுகிறது.

ஜபாலியா முகாமில் உள்ள பல்வேறு தற்காலிக குடியிருப்புகள் மீதும் வான்வழியாக வெடிகுண்டுகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடமாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 42,500 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 99 ஆயிரம் பேர் வரை படுகாயம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles